Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகராட்சி இரண்டு வார்டுகளில் இரண்டு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது – மாநகராட்சி தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கிவரும் அய்யளம்மன் படித்துறை நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் ஓயமாரி மயானம் அருகில் உந்துக்குழாய் தடம்  மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் இப்பணியினை செய்வனவே செய்திடும்  பொருட்டு மாநகராட்சியால் 9.06.2021 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.   

நாளை மற்றும் நாளை மறுநாள்(10.06.2021 -11.06.2021) வார்டு 62 மற்றும் 65 குட்பட்ட புகழ் நகர், பாரி நகர், பழைய எல்லைக்குடி, காவேரி நகர், சந்தோஷ் நகர், ஆலந்தூர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய 7மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.

12.06.2021 ஆம் தேதி அன்று வழக்கம்போல் குடிநீர் விநியோகம் இருக்கும்.
 இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *