Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த திருச்சிராப்பள்ளி கோட்டம் புதிய டிஜிட்டல் RPF உதவி மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தியது

பாலக் ராம் நெகி, பிரிவு ரயில்வே மேலாளர், திருச்சிராப்பள்ளி கோட்டம், தெற்கு ரயில்வே, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF) உதவி மேலாண்மை அமைப்பை இன்று (26.11.2025) அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் கூடுதல் பிரிவு ரயில்வே மேலாளர் பி.கே. செல்வன், மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் (Sr.DSC/TPJ) ப்ரசாந்த் யாதவ் மற்றும் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Sr.DSC/TPJ ப்ரசாந்த் யாதவ், இந்த அமைப்பின் செயல்பாட்டை பிரிவு ரயில்வே மேலாளருக்கும் பிற அதிகாரிகளுக்கும் விளக்கினார். இதன் செயல்திறன் மற்றும் திறம்பட செயல்படுவதை பரிசோதிப்பதற்கும் அவர்களை அழைக்கப்பட்டது. விரைவான பதில் வழங்கப்பட்டுள்ளது என்பதில் DRM திருப்தி தெரிவித்துள்ளார். இந்த அமைப்பை உருவாக்கிய RPF குழுவை அவர் பாராட்டினார்.

ரயில் பாதை ஓரங்களில் பல முக்கிய நிலையங்களில் RPF/GRP இருப்பு குறைவாக இருக்கும். அதனால் பயணிகளின் புகார்கள் உடனடியாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க “டிஜிட்டல் RPF உதவி மேலாண்மை அமைப்பு” உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் எளிதாக உதவி கோரலாம், துன்புறுத்தல், திருட்டு, சந்தேகத்துக்கிடமான நடத்தை போன்றவை குறித்து புகார் வழங்கலாம். மேலும் பாதுகாப்பு சார்ந்த கவலைகளையும் பதிவு செய்யலாம்.

செயல்படுத்துவதற்கு முன்பு, இந்த அமைப்பு திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் சில பயணிகளால் பயன்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. கிடைத்த நேர்மறை பின்னூட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு, தற்போது இது ஸ்ரீரங்கம் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைப்பு குறும்பார்வை (System Overview): RPF உதவி மேலாண்மை அமைப்பு தொட்டு செயல்படும் (touch-based) பலமொழிகள் கொண்ட, பயனர் நட்பு வசதி கொண்ட அமைப்பு. இது ரயில் நிலையங்களில் நிறுவப்பட்ட கியாஸ்க் இயந்திரங்கள் மூலம் செயல்படும். இந்த அமைப்பின் மூலம் பயணிகள் முன் அமைக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து தங்கள் பிரச்சனையைத் தேர்வு செய்யலாம், தங்கள் மொபைல் எண்ணை உள்ளிடலாம், தேவையானால் குரல் செய்தி சேர்க்கலாம், உடனடியாக உதவி கோரிக்கை அனுப்பலாம், “கால் நௌ” (Call Now) வசதி மூலம் நேரடியாக RPF-ஐ அழைக்கலாம்.
புகார் செயல்முறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதன் மூலம் பதிலளிக்கும் நேரம் குறைக்கப்படுகிறதுடன், கண்காணிப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு போன்றவை RPF வலையமைப்பில் மேம்படுத்தப்படுகிறது.

முக்கிய நோக்கங்கள் (Key Objectives): விரைவான உதவியால் பயணிகள் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்துதல், எளிய மற்றும் பயனர் நட்பு இடைமுகத்தை வழங்குதல், வகைப்படுத்தப்பட்ட மற்றும் குரல் உள்ளீட்டின் மூலம் துல்லியமான புகார் பதிவு, பயணிகள் மற்றும் RPF பணியாளர்கள் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல், கையால் எழுதப்படும் ஆவணப்பணிகளை குறைத்தல்.

பயனர் இடைமுக முன்னோட்டம் (User Interface Overview): இடைமுகம் எளிமையானது, ஒழுங்கமைக்கப்பட்டது. பயணிகள் ஒவ்வொரு படியையும் எளிதாக புரிந்துகொள்ள பெரிய பொத்தான்கள், சின்னங்கள், தெளிவான குறிச்சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோம் ஸ்கிரீனில் பொதுவாக பயன்படுத்தப்படும் புகார் வகைகள், திருட்டு, துன்புறுத்தல், சந்தேகத்துக்கிடமான செயல்பாடு, தொலைந்த பொருள், பாதுகாப்பு அச்சுறுத்தல், பிற பிரச்சினைகள்.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஐகான்கள் இணைக்கப்பட்டுள்ளதால், ஆங்கிலம் தெரியாத பயணிகளும் எளிதில் தேர்வு செய்ய முடியும்.

இது இந்திய ரயில்வே முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் முயற்சி. தற்போது இது திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் சோதனை செய்யப்படுகிறது. அடுத்த கட்டமாக தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற நிலையங்களிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் பின்னூட்டத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் பிற முக்கிய மற்றும் பாதை ஓர நிலையங்களிலும் இது விரிவாக்கப்படும்.

TPJ கோட்டம் முழுவதும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் RPF தொடர்ந்து உறுதியாக செயல்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *