Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொரோனா தொற்றால் இறந்த மூதாட்டியின் உடலை இந்து மத முறைப்படி அடக்கம் செய்த திருச்சி மாவட்ட த.மு.மு.க

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் வசித்த சுந்தரவள்ளி என்ற 72 வயதுடைய மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை தமுமுகவை சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி தகனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சியில் தமுமுக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் முகமது தல்ஹா கூறுகையில்… சுந்தரவள்ளி என்பவர் திருவெறும்பூர் பகுதியில் வசித்து வந்தார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது அவர் இறந்த சூழலில் அவர்களுடைய பிள்ளைகள் உடல் அடக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தமுமுக வின் சார்பாக அவருடைய உடல்நிலை திருவெறும்பூர் பகுதியில் உள்ள மயானத்தில் இந்து முறைப்படியே தகனம் செய்துள்ளோம்.

இதேபோன்று தொற்றில் உயிரிழப்பவர்களுடைய உடலை பெற்று அவர்களுடைய மத நம்பிக்கை முறைப்படி அடக்கம் செய்து வரும் பணியில் தங்களை தன்னார்வத்தோடு தமுமுக செயல்படுகிறோம் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *