Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி புத்தக கண்காட்சியில் படைப்பாளர்களுக்கு தனி அரங்கு

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று (23.11.2023 வியாழக்கிழமை) முதல் டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரை திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதில் திருச்சி மாவட்ட படைப்பாளர்களுக்கு ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் திருச்சி மாவட்ட படைப்பாளர்கள் தங்கள் புத்தகங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் பிரதிகளை நமது மாவட்ட படைப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு அரங்கு எண் மற்றும் தகவல்களுக்குஸ9487091122, 8531849251 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *