Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி காவிரி பாலத்தில் சேதம் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருச்சியையும், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பிற பகுதிகளையும் இணைக்கும் பிரதான பாலமாக விளங்கும் திருச்சி காவிரி பாலம் ஏற்கனவே சேதமடைந்து எட்டு மாதமாக போக்குவரத்து பயன்பாடு இல்லாமல், கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது திருச்சியில் பெய்த மழை காரணமாக காவிரி பாலத்தில் சாலைகள் சேதமடைந்துள்ளது. புதிய பாலத்தில் இப்படி சாலை சேதமடைந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாலத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்காக மேலே ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு ஜேசிபி மூலம் அள்ளப்படுவதால் சாலை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தலையிட்டு காவிரி பால சாலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *