"பெண் சேவை விருது" விண்ணப்பிக்க திருச்சி ஆட்சியர் அழைப்பு:

"பெண் சேவை விருது" விண்ணப்பிக்க திருச்சி ஆட்சியர் அழைப்பு:

பெண்களுக்கு சேவை செய்தற்கான  சிறந்த நிறுவனத்திற்கும், பெண்களுக்காக சிறப்பாக பணியை செய்த சிறந்த சமூக சேவகர்களுக்கும் சுதந்திர தின விழாவின்போது விருது வழங்குவது வழக்கம்.

அதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடைபெற உள்ள சுதந்திர விழாவில் பெண் சேவைக்கு விருதுகள் வழங்குவதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

விண்ணப்பத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பணிபுரியும் சேவைகளின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு பக்கம் தனியாக இணைக்கவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.6.2020 மேலும் விவரங்களுக்கு 0431- 2413796 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.