Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி கிரிக்கெட் அசோசியேசன் நடத்திய கிரிக்கெட் போட்டி – முதல் பிரிவில் ‌பிஷப் ஹீபர் கல்லூரியை வீழ்த்திய திருச்சி தேசிய கல்லூரி!!

திருச்சிராப்பள்ளி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று திருச்சியில் நடந்தது. திருச்சி முழுவதும் 9 கல்லூரிகள் இதில் பங்கு பெறுகின்றன.

Advertisement

இந்நிலையில் இன்று முதல் பிரிவிற்கான ஆட்டத்தில் திருச்சி தேசிய கல்லூரி மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளின் கிரிக்கெட் அணிகளும் மோதியது. 45 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பிஷப் ஹீபர் கல்லூரி பீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

முதலாவதாக பேட்டிங் செய்த தேசியக் கல்லூரி கிரிக்கெட் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர். அதன்பின் 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பிஷப் ஹீபர் கல்லூரி அணியினர் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதில் குறிப்பாக தேசிய கல்லூரி சார்பில் ஹரிஷ் என்ற வீரர் 33 ரன்களையும், பாலா என்ற வீரர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்நிலையில் முதல் சுற்று ஆட்டத்தில் திருச்சி தேசிய கல்லூரி வெற்றி வாகை சூடியது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *