Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்புகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊர்க்காவல்படையில் தற்சமயம் 51 ஆண் மற்றும் 05 பெண் ஊர்காவல்படையினர் (மொத்தம் 56) தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது.

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி)

வயது : 20 முதல் 45 வயதுக்குள்

மேற்கண்ட தகுதியுடையோர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5/- தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம், திருச்சி – 620020 என்ற முகவரிக்கு (05.11.2023)-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற (08.11.2023)-ம் தேதி காலை 7:09 மணிக்கு திருச்சி சுப்பிரமணியபுரம், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என்பதை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *