பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் திருச்சி மாவட்டம் 144-மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 5.00 மணியளவில் அதிரடி “பகுதி ஆதிக்கம்” (Area Domination) மற்றும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
ஜீயபுரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் (SDO) திரு. கதிரவன் அவர்கள் தலைமையில் இந்த அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் மத்திய மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் கலந்து கொண்டனர்:
மத்தியreserve போலீஸ் படை (CRPF): 50 வீரர்கள்,ஆயுதப்படை: ஒரு RSI மற்றும் 30 காவலர்கள், உள்ளூர் காவல் துறை: ஒரு DSP, 5 ஆய்வாளர்கள் மற்றும் 70 இதர காவலர்கள்,ஊர்க்காவல் படை: 43 வீரர்கள்
மொத்த பலம்: சுமார் 200 பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments