Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி நெடுஞ்சாலைதுறை உதவி செயற்பொறியாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11வது குறுக்கு தெருவில் உள்ள, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்ற நிலையில், நேற்று இரவு திருச்சிக்கு வந்த அவர் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவிருந்த பொருட்களை கீழே கிடந்தது. இதுக்குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் 45 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருள்கள், 50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *