Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சிக்கு அபாயம் இல்லை – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

மேட்டூர் அணையில் இருந்து ஏறத்தாழ 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு, முக்கொம்பு மேலணையில்  ஆய்வு மேற்கொண்டார். நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் நீரின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்குபேட்டி அளித்த அமைச்சர்…. மேட்டூரில் இருந்து நீர்வரத்து   தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றில் கூடுதலாக வெள்ளம் வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் வெள்ள அபாயம் இல்லை.

ஆனாலும் முன்னெச்சரிக்கையாக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *