Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மணிகண்டம் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி கொரோனா அவசர சிகிச்சை பிரிவாக மாற்றம்!! ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு:

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள மாணவர்கள் விடுதிகளை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக அவசர சிகிச்சை பிரிவாக மாற்றப்படவுள்ள இடத்தினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டத்தில் கூடுதலாக தனியறை 200 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர சிகிச்சை பிரிவாக அமைக்கப்படவுள்ளது.

Advertisement

மாணவர் விடுதியில் 100 படுக்கை மெத்தைகள், மாணவியர் பிரிவில் 100 படுக்கை மெத்தையும், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் இதற்கான ஏற்பாடுகளையும், இதற்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சீரான தண்ணீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வருகின்ற (13/04/2020)க்குள் மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை மருத்துவ பணிகள் செயற்பொறியாளர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மருத்துவப் பணிகள் செயற்பொறியாளர்கள் நித்தியானந்தன்,சிவகுமார் நெடுஞ்சாலைத்துறை ஊரகபணிகள் செயற்பொறியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *