Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பொதுமக்கள் நல்லுறவுக்காக திருச்சி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு!

திருச்சியில் காவல் துறையினர் பொதுமக்கள் நல்லுறவுக்காக கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. 

Advertisement

திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி பள்ளியிலிருந்து தில்லைநகர், கரூர் பைபாஸ் சாலை முடிவில் கொடிஅணிவகுப்பு பேரணி முடிவடைந்தது. இதில் திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர்கள் உள்ளிட்ட 150 காவலர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து பொதுமக்களுடன் பாதுகாப்பிலும் நல்லுறவிலும் காவல்துறையினர் உடன் இருப்பதை வலியுறுத்தவே இக்கொடி அணிவகுப்பு நடத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது கட்டமாக திருவானைக்காவல் பகுதியில் இருந்து துவங்கி பாரதி நகர், நடு கொண்டையன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட இருக்கிறது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *