Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து:

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து அதிகாலையில் ஏற்பட்டது.6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து. 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த தீ விபத்தால் திருச்சி – சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை கரும் புகை மூட்டம் காணப்படுகிறது.இதனால்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த உதயன், திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோருக்கு சொந்தமானது இந்த டயர் கம்பெனி.10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 3 மணி நேரத்திற்கு மேலாக  தீயணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சம்பவ இடத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துணை இயக்குனர் மீனாட்சி தீயணைப்பு பணிகளை துரிதப்படுத்தினார்.மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ யும், புகையும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *