தமிழக அரசால், மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடத்த வேண்டுமென்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில் வருகிற 29.10.2025 தேதி சிறப்பு வார்டு சபை கூட்டம் காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள், இக்கூட்டத்தில் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவற்றில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து விவாதிக்கலாம். மேலும், பள்ளிகளில்

செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள், மேம்படுத்தும் முறை பற்றியும் விவாதிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments