Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: முக்கொம்பு மேலணையிலிருந்து காவேரி, கொள்ளிடத்தில் நீர் திறப்பு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு  வரும் நீரின் அளவு மற்றும் காவேரி, கொள்ளிடத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து திருச்சி மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவு 14,000 கன அடியாக உள்ளது. இந்த நீர்வரத்தில்,
காவேரி ஆற்றில்: 13,600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிளை வாய்க்கால்களில்: 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைப் பொறுத்தே முக்கொம்புவில் இருந்து காவேரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம் இருக்கும் என்பதால், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் கரையோர மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


ஆற்றில் இறங்கத் தடை: பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ அல்லது துணிகளைத் துவைக்கவோ வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, நீர் நிலைகளின் அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *