Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கடந்த 14.08.22-ம்தேதி திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்து, ஹோட்டல் உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி முத்து (எ) முத்துகிருஷ்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி முத்துகிருஷ்ணன் மீது கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கும், ஒருவரை அரிவாளால் தாக்க முயன்ற வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என விசாரணையில் தெரியவருகிறது.

மேலும், ஸ்ரீரங்கம் பகுதியில் இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்த சுதாகர் என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி சுதாகர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, எதிரிகள் முத்து (எ) முத்துகிருஷ்ணன் மற்றும் சுதாகர் ஆகியோர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *