Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் வீட்டின் சுவரில் மோதி 108 ஆம்புலன்ஸ் விபத்து இருவர் காயம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி கிராமத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த வேம்பு என்பவரை தொட்டியம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் தொட்டியம் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் தொட்டியம் நோக்கி சீனிவாசநல்லூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சீனிவாச நல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவரது வீட்டின் சுவற்றில் ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முசிறி தாலுக்கா பேரூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் தொட்டியம் தாலுகா கோடியாம் பாளையம் சேர்ந்த டெக்னீசியன் குருநாதன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் ஓட்டுநர் சிவக்குமார் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக தகவல் பெற்ற தொட்டியம் போலீசார் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *