Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா – மாநகர காவல் ஆணையர் ஆய்வு

108 வைணத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. நாளை மறுநாள் (04.12.21) பகல்பத்து முதல் நாள் திருநாள் துவங்குகிறது. காலை 7:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 8.15 மணிக்கு அர்ஜுன மண்டபத்தை வந்தடைவார்.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து, இராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும். முக்கிய திருவிழாவான இராப்பத்து உற்சவம் வருகிற (14.12.2021) அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் செர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதிகாலை 3.45 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன், கிளிமாலை அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவார். அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும்.

இதனையெடுத்து (24.12.2021) வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கோயில், இணை ஆணையர் மாரிமுத்துவுடன் வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *