Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

 திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலையை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி (9.9.2022) இன்று நடைபெற்றது. பேரணியை முதல்வர் டாக்டர் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார் .மருத்துவ மாணவர்கள், செவிலிய மாணவர்கள் ,மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்கள் மருத்துவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

மேலும்  மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ் மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் நிரஞ்சனா தேவி மனநல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் முரளிதரன் RMO டாக்டர் ராஜா  ARMO டாக்டர் சித்ரா கலந்து சிறப்பித்தனர்.முதல்வர் நேரு  வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் தற்கொலை எண்ணங்களை தடுப்பது எப்படி என்பதையும் எடுத்துரைத்தார். பொதுமக்களுக்கு தற்கொலையை தடுப்பது எப்படி என்ற விழிப்புணர்வு பிரசுரம் வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *