Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

8ம் வகுப்பு படிக்கும் அத்தை மகளை கர்ப்பமாக்கி வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் – போக்சோ சட்டத்தில் கைது!!

திருச்சி பெரிய மிளகு பாறை நாயக்கர் தெருவில் வசித்து வந்த காளியப்பன் – சரசு தம்பதியினரின் மகன் கார்த்தி(23). இவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காளியப்பனின் சகோதரி அன்னக்கிளி திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர், காரியாப்பட்டியில் வசித்து வந்துள்ளார். அன்னக்கிளி மகள் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தன்னுடைய தாய் வீடான பெரியமிளகுபாறை நாய்க்கன் தெருவிற்கு அன்னக்கிளியும் அவருடைய 8ம் வகுப்பு மகளும் இங்கு வந்து விட்டார். 

Advertisement

அன்னக்கிளி இரவு நேரத்தில் கருமண்டபம் பகுதியில் உள்ள ஓட்டல் வேலைக்கு சென்றுவிடுவார். இதற்கிடையில் அத்தை மகளை தினந்தோறும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்துள்ளார் காரத்தி. இதனால் அந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கார்த்திக் வேறு ஒரு பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். 

மேலும் இது பற்றி தாய் மற்றும் பிறரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுளார் கார்த்திக். தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கார்பமமாக இருப்பதை அறிந்த அன்னக்கிளி இது குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *