Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பிரபல ரவுடியுடன் ஆயுதங்களை வைத்து ரீல்ஸ் செய்த இளைஞர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் மதுபான கடை அருகே ஒருவர் பட்டாக்கத்தியுடன், நான் தான் இந்த ஏரியாவில் ரவுடி என்றும், அசிங்கமாக திட்டிக்கொண்டும், பொது மக்களை அச்சுறுத்தியது தொடர்பாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487484651 மூலம் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், ஜீயபுரம் காவல்துறையினர் குற்றவாளியான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா,

கோப்பு No2-4, கீழத்தெரு கண்ணன் மகன் பிரசாந்த், (20), என்பவரை சுற்றி வளைத்து பிடித்து ஜீயபுரம் காவல்நிலைய குற்ற எண் 84/24, U/s 294(b), 506(ii) IPC r/w 25(1) (A) Arms Act-ன்படி வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் சோமரசம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கோப்பு நாகராஜ் என்பவரது பெயரில் Koppu Nagaraj Fans Club Koppu Nagaraj Network Cu to Facebook, Youtube, Instagram உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பிரபல ரவுடியான கோப்பு நாகராஜ் என்பவருடன் சேர்ந்து ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும்.

வீடியோக்களையும் பதிவிட்டு அவருக்கு துதிபாடும் வேலைகளில் ஈடுபட்டதாகவும், மறைமுகமாக பல்வேறு வழிகளில் கோப்பு நாகராஜ் என்பவருக்கு உதவிகள் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *