Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் காவல் நிலையத்திற்கு முன்பு வாலிபர் குத்தி கொலை!

திருச்சி சமயபுரம் மகாளிக்குடியை சேர்ந்த விக்கி(22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் சமயபுரம் காவல் நிலையம் முன்பு வைத்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, காவல் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயபுரத்தில் தேங்காய், பழம் கடை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் காவல்நிலையத்திற்கு சென்ற விக்கியை கத்தியால் குத்திய மகாளிகுடி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் தங்கமணியை சமயபுரம் போலீஸார் கைது செய்து, கொலைத் தொடர்பாக தங்கமணி உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் விழுந்து கிடந்த விக்கியை அங்கிருந்த சிலர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்,அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் தங்கமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *