Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மழையில் மிதந்த ஜி கார்னர் மொத்த காய்கறி சந்தை!

Write caption…

கொரோனா ஊரடங்கு ஆரம்பமான முதல் திருச்சி காந்தி மார்க்கெட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்த வியாபாரம் பால் பண்ணைக்கு மாற்றப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து அதிகமான மக்கள் அங்கு கூடியதால் தொடர்ந்து ஜி கார்னர் பகுதிக்கு மொத்த வியாபாரம் மாற்றப்பட்டு தற்போது வரை அங்கு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில் ஜி கார்னர் மைதானத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள் இரவு நேரத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் இந்த பகுதியில் இருந்து வாகனங்களில் வெளியே எடுத்து வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *