Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரத்தில் ஆட்சியர் தடை உத்தரவு காற்றில் பறக்கிறது -பொதுமக்கள் அச்சம்!!

Write caption…

சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் கெரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பேரூராட்சி பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவிருந்தார்.

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் வழக்கம் போல் திறந்திருக்கும். தெருக்களில் கடைகள் செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை திறக்க கூடாது.கோயில் தவிர மற்ற இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ள நிலையில் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறந்து வைத்து வியாபாரம் படு ஜோராக நடக்கிறது.

Advertisement

கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் சமயபுரம் கோவில் தவிர பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் கடைகள் அனைத்தும் திறந்துள்ளனர். இயல்பு நிலையில் உள்ளது போல் கூட்டம் கடைகளில் நிரம்பி வழிகிறது மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி கடைகளைத் திறந்துவைத்து வியாபாரிகள் வியாபாரத்தை மேற்கொண்டுள்ளனர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Advertisement
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *