Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

செய்தியாளர்களிடமிருந்து எஸ்கேப் ஆன அமைச்சர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு, வயலூர் சாலை, உய்யக்கொண்டான் பாலம் அருகில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 225 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆர்.வைத்திநாதன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் கே.என்.நேருவிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் சிரித்துக் கொண்டே இரு கரம் கூப்பியவாறு விருவிருவென அமைச்சர் சென்றுவிட்டார்.

குறிப்பாக சில நாட்களாக செய்தியாளர்கள் கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மறுத்துவரும் அமைச்சர் கே.என்.நேரு துறை சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *