Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 7ம் நாள் – முத்து கிரீடம், மகர கண்டிகையில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் “வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து (21.12.2020) 7-ம் நாள் விழாவில் நம்பெருமாள் முத்து கிரீடம் மகர கண்டிகை ரத்தன அபயஹஸ்தம் காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது .

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் 7ம் நாள் திருவிழா இன்று நடைபெறுகிறது.

வரும் 24ம் தேதி வரை நடைபெறும் பகல் பத்து திருநாள் புறப்பாட்டின் போது உற்சவர் நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ஜுன மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Advertisement

அந்த வகையில் இன்று காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் முத்து கிரீடம், மகர கண்டிகை, ரத்ன அபயஹஸ்தம், காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *