பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் தொகுதி பொன்மலைப்பட்டியில் அமைச்சர் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார்திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பொன்மலை பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் ( லிமிடெட்) திருச்சிராப்பள்ளி
மண்டலத்தின் சார்பில் தீரன் நகர் கிளையின் மூலம் கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் பொதுமக்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திர பேருந்து நிலையம் செல்வதற்கு ஏதுவாகமகளிர் விடியல் பயண புதிய பேருந்து வசதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று 14/06/2025 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மகளிர் விடியல் பயண புதிய பேருந்து வசதியினை தொடங்கி வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேருந்தில் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்தார்கள் . பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் .D.சதீஷ்குமார் மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ், ரமேஸ் வட்டக் கழகச் செயலாளர்கள் பரமசிவம் முருகன் அவர்கள் ,போக்குவரத்து கழக பணியாளர்கள் ,தொழிற்சங்க பிரதிநிதிகள் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்
பேருந்து கீழ்க்கண்ட வழித்தடங்களில் வழியாக இயக்கப்படுகிறது
( வழி )கொட்டப்பட்டு இந்திரா நகர் மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம்
சத்திரம் பேருந்து நிலையம் (வழி பாலக்கரை மத்திய பேருந்து நிலையம்) பொன்மலைப்பட்டி.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments