Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுக,அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என டிடிவி கடுமையான விமர்சனம்

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமமுக வேட்பாளர் சாருபாலாவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கொரோனா காலகட்டத்தில் எந்த வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடக்கவில்லை. ஆனால் அச்சமயத்தில் ஒரு லட்சம் கோடி கடன் என துணை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்கிறார். 

தேர்தலுக்கு பிறகு இவர்கள் செய்த லட்சக்கணக்கான கோடி ஊழல் வெளிவரும் என்றார் .இவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏரப்போகிறது. கோடிக்கணக்கில் பணத்தை ஆங்காங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள். மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர் இந்த தேர்தலில் காந்தி தாத்தாவை நம்பி களத்தில் உள்ளனர் .

இன்னொரு கட்சி விஞ்ஞான ஊழல் செய்த கட்சி. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் ஏற்கனவே அரசு கஜானா காலியாகிவிட்டது. தமிழகத்தின் வளங்களும் மக்கள் சொத்துகளும் தான் பறிபோகும் அவர்கள் உங்களை தான் சூறையாடுவார்கள் என்று திமுக ,அதிமுக இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *