Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy News

திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

No image available

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02.07.2025 முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஓர் கொடிய நோயாகும். எனவே இக்கொடிய நோயிலிருந்து  கால்நடைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு அனைத்து வ கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இத்தடுப்பூசியினால் 100%  கால்நடைகளை கால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில் 7-வது சுற்று தடுப்பூசிப் போடும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த 7-வது சுற்று தடுப்பூசி போடும் பணியானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுமார் 3 இலட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறவுள்ளன. இத்தடுப்பூசிப் பணியானது 02.07.2025 முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினரால் காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரையிலும், பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்குத் தவறாமல் தடுப்பூசிப் போட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு

கால்நடையும் இந்நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தை தேடிவரும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *