Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம்

No image available

நேற்று 27/6/2025 மாலை புதிய நீதிமன்ற வளாகத்தில்  உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஐந்து

 வருடத்திற்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியானை ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து நீதிபதிகளுக்கு நேரிலும்

 காணொளி மூலமாகவும் மற்றும் அதிகாரிகளுக்கு மாண்புமிகு மாவட்ட நீதிபதி அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன், கார்த்திகா, நசீர் அலி, கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன் காவல்துறை உதவி ஆணையர்கள் யாஸ்மின் பானு, ரங்கசாமி, கதிரவன் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக உதவியாளர், மாவட்ட நில அளவை உதவியாளர் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் S. P. கணேசன் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *