இன்று 12.08.2025 உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம்,திருச்சிராப்பள்ளி வனச்சரகம் எம். ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில், பராமரிக்கப்பட்டு வருகின்ற யானைகளுக்கு மாவட்ட வன அலுவலர், திருமதி S. கிருத்திகா இ.வ.ப அவர்களின் முன்னிலையில் , திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் வே.ப.சுப்பிரமணியம் தலைமையில், யானைகளுக்கு பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் மற்றும் கரும்புகள் உள்ளிட்டவற்றை கொடுத்து, பாரம்பரிய முறைப்படி உலக யானைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர்களுடன் வனச்சரக அலுவலர்கள்,வனவர்கள்,வன கால்நடை உதவி மருத்துவர்,
வனப் பணியாளர்கள், யானை பாகன்கள் (மாவுத் & காவடி ) கலந்து கொண்டனர். மேலும் இங்குள்ள யானைகளுக்கு நீர் தெளிப்பான், சேற்று குளியல், பாத குளியல், நீச்சல் குளம், நடை பயிற்சி, குளியல் தொட்டி போன்ற வசதிகள் செய்ய பட்டுள்ளது.தற்போது புதியதாக வயது முதிர்ந்த யானைகளுக்கு பிரத்யேகமாக நீர் சிகிச்சை முறை (HYDRO THERAPHY), யானைகளுக்கு சிகிக்சை அளிப்பதற்கு கிரால் அமைப்புடன் கூடிய சிகிச்சை கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யானைகளின் உடல் மற்றும் மன நலம் மேம்பாட்டிற்கு புதியதாக
விளையாட்டுப் பொருட்களுடன் கூடிய புல் தரைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் தினம் (World Elephant Day) யானைகளின் பாதுகாப்பு, நலன் மேம்பாடு, மற்றும் அவற்றின் வாழிடங்களை காப்பது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலகளவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் -“தாய்மார்கள் & நினைவுகள் “.
இந்த கருப்பொருள் பெண் யானைகளின் (தாய்வழி யானைகள் ) முக்கிய பங்கை எடுத்து காட்டுகிறது, இவ்வாறாக உலக யானைகள் தினம், எம். ஆர். பாளையம், யானைகள் முகாமில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments