Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் நிறுவனத்தில் நானோ அறிவியல் பயிலரங்கம்

இந்திரா கணேசன் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில்
09/09/2025 அன்று நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது.

மெல்லிய படல நானோ பொருட்கள் உற்பத்தி மற்றும் குணாதிசயம் குறித்த பயிற்சியில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய கற்றல் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு பாரம்பரிய விழாவான குத்துவிளக்கு ஏற்றலுடன் இந்நிகழ்வு தொடங்கியது. தொடக்க அமர்வில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின்
செயலர் க. இராஜசேகரன் தலைமை தாங்கினார்.

இயக்குநர் டாக்டர் க. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா தொடக்க உரை நிகழ்த்தினார், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் தி.பவித்ரா, உதவி பேராசிரியர் அலைடு ஹெல்த் சயின்ஸ், வரவேற்புரை வழங்கினார், பேராசிரியர் டி.டாக்டர் கார்த்திகேயன், பேராசிரியர், இயற்பியல் துறை, அரசு பொறியியல் கல்லூரி, லால்குடி, சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமதுரையில் மின்னணுவியல், ஆற்றல் சேமிப்பு மற்றும் ஒளியியல் போன்ற பல்வேறு தொழில்களில் மெல்லிய படலங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, நானோ பொருட்களின் பரிணாமம் குறித்து அவர் விவாதித்தார்.
உயர் செயல்திறன் கொண்ட நானோ பொருட்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான மேம்பட்ட உற்பத்தி நுட்பங்கள் மற்றும் பண்புக்கூறு கருவிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

அவரது உரை இந்த பகுதியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் குறித்த நுண்ணறிவு புரிதலை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.
இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஆர். தேன்மொழி தலைமையிலான நேரடிப் பயிற்சி அமர்வு, மெல்லிய படல நானோ பொருட்களின் உற்பத்தி மற்றும் பண்புக் கூறுகளில் பங்கேற்பாளர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
பல்வேறு நுட்பங்களில் வாயிலாக பங்கேற்பாளர்களுக்கு தேர்ந்த அனுபவத்துவத்துடன் வழிகாட்டினார்.
அமர்வு முழுவதும், ஒவ்வொரு செயல்முறையின் விரிவான விளக்கங்களையும் வழங்கினார்,
இது பங்கேற்பாளர்களுக்கு
ஆழமான புரிதலைப் உறுதி செய்தது. இது அனைவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற கற்றல் அனுபவமாக அமைந்தது.

இந்தப் பயிற்சி பட்டறையில் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், எஸ். ஆர். எம். கலை அறிவியல் கல்லூரி காட்டாங்குளத்தூர்,சென்னை, சவிதா பல்கலைக்கழகம் சென்னை, மன்னை நாராயணசாமி கல்லூரி, மற்றும் எஸ். டி .இ. டி .கலை அறிவியல் கல்லூரி, மன்னார்குடி மற்றும் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சி பட்டறையை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். கே.சித்ராதேவி முதல்வர், அலைடு ஹெல்த் சயின்ஸ், முனைவர் டி.ஸ்ரீராம், முனைவர் பரத்குமார், முனைவர் ப.வரலட்சுமி ஆகியோர்
ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இறுதியில் முனைவர் ஸ்ரீ ராம் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவு பெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *