Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிக்கு திடீரென வந்த தவெக ஆதவ் அர்ஜுனா ஆனந்த் – பரபரப்பு

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர்கள் N.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்தடைந்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்த் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தவெக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சாலை மார்க்கமாக காரில் தனது குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.

இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறும் போது திருச்சியில் உறவினர் துக்க நிகழ்வுக்கு செல்வதாக கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *