நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 5 ஆம் நாளில் – திருமாலை பிரபந்தம் செவிமடுக்க
சௌரிக் கொண்டை சாற்றி;
அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை; முல்லை பூ சரம் சுற்றி;
வைரஅபய ஹஸ்தம் சாற்றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து; கீழே தொங்கல் பதக்கம் ஆட;
திருமார்பில் – ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம்; அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்:
அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை;
“அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து
பின் சேவையாக – சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்திக்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments