Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

புதுக்கோட்டை MIT பொறியியல் கல்லூரியில் 220 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல்

புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஐ.டி (MIT) பொறியியல் கல்லூரியில், “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், நவீன தொழில்நுட்ப உலகில் மடிக்கணினிகளின் அவசியம் குறித்தும், மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் கல்லூரி நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் முனைவர் ஃப்ளோரி வயலட் ஆறுன். துணைத் தலைவர் (Vice Chairman) அப்துல் ஜலீல்.

இவ்விழாவில் இக்கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 220 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அமைச்சர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்குத் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *