Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா!

சுற்றுச்சூழலின் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாகஇன்று தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

நாம் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து காகிதப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நெகிழி பைகளினால் ஏற்படும் அபாயம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது .

மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர் .பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகள் பரிசாக வழங்கப்பட்டது .

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்த்து சில்வர் பாட்டில்களை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார் .

மேலும் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கு ஏற்ப மாணவர்கள் இன்று பள்ளியில் கொய்யா மாதுளை சீதா போன்ற பழங்கள் தரக்கூடிய செடிகளையும் ,பல வண்ண மயமான பூச்செடிகளையும் பள்ளியில் நட்டனர் .

மாணவர்களுக்கு பல பயனுள்ள அறிவுரைகளைஅதாவது நீர் சேமிப்பு, நெகிழி பயன்பாட்டு குறைப்பு, காகிதப்பையின் அவசியம்’ மரங்கள் வளர்ப்பதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளியின் ஆசிரியை சரண்யா விளக்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

 

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *