திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து புதுவாடி பள்ளி மாணவர்கள் தங்கள் ஊரில் இருந்து பள்ளிக்கு செல்வதற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் சென்று தான் பேருந்து ஏறும் நிலை உள்ளது.

உடனடியாக பள்ளிக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி தமிழகம் முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைப் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் உடனடியாக போக்குவரத்து கழகத்திற்கு பேசி பின்னர் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து உடனடியாக அதை செய்து தர வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மாலை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது.

மணப்பாறை, வையம்பட்டி, நடுப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவாடி வரை செல்லும் பள்ளி மாணவியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கையால் ரிப்பன் வெட்டி பின்னர் மாணவர்களுக்கு லட்டு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அந்த பேருந்து புறப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்தில் பேருந்து வருவதை கண்டு சிறுவர் முதல் பெரியோர் வரை மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அந்தப் பேருந்துக்கு ஊர் பொதுமக்கள் தேங்காய் உடைத்து, ஆளாத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments