Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஆவினுக்கு பால் நிறுத்தம் – திருச்சி அயிலாப்பேட்டையில் விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்டம் கோப்பு அருகே உள்ள அயிலாப்பேட்டை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 44, எருமைபாலுக்கு 60ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, இன்று முதல் ஆவினுக்கு தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் இன்று ஆவினுக்கு பால் வழங்குவது நிறுத்தி விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அயிலாபேட்டை கிராமத்தில், அயிலாப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் ஏராளமான மாடுவளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கு கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *