சர்வதேச போதை ஒழிப்பு தினம்- மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி

Jun 26, 2025 - 10:56
Jun 26, 2025 - 11:00
 0  238
சர்வதேச போதை ஒழிப்பு தினம்- மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (26.06.2025) சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பழகத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் வாசிக்க, அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போதை

பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரசு வளாகத்தில் தொடங்கி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் திரு.அருள்,

 கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ்.குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் உதய அருணா, உதவி ஆணையர் (கலால்) திரு.உதயக்குமார். மேற்கு வட்டாட்சியர் திரு.பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0