பெண் மூச்சுக்குழாயில் சிக்கிய ஊசி- வெற்றிகரமாக சிகிச்சை செய்து ஊசியை அகற்றிய அரசு மருத்துவர்கள்

திருச்சி, ஐ.எம்.ஐ.டி. நகரைச் சேர்ந்த 18 வயது பெண் நோயாளி ஒருவர், 05.07.2025 அன்று மாலை 05.45 மணியளவில், தற்செயலாக ஊசியை உட்கொண்டதால், திருச்சிராப்பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தார்.
உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் கருத்து பெறப்பட்டது. OGD ஸ்கோபி செய்யப்பட்டு, உணவுக்குழாயில் ஊசி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, மார்புடன் கூடிய ஊவு - கழுத்து எடுக்கப்பட்டு, மூச்சுக்குழாயில் ஊசி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மறுநாள் 06.07.2025 காலை 07.45 மணியளவில், மயக்க மருந்தின் கீழ் RIGID
பிராங்கோஸ்கோபியைப் பயன்படுத்தி ஊசி அகற்றப்பட்டது.திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழு, முதல்வர் டாக்டர் குமரவேல், கண்காணிப்பாளர் டாக்டர் உதய அருணா, காது, தொண்டை பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணி ஆகியோர் தலைமையில், காது, தொண்டை உதவிப்
பேராசிரியர் டாக்டர் அண்ணாமலை, மயக்கவியல் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் மோகன் மற்றும் குழுவினர், அந்தப் பெண்ணுக்கு சரியான நேரத்தில் மற்றும் உடனடி சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






