திருச்சி மாவட்டத்தில் புதிய அரசு தொழில் பயிற்சி மையம்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொழிற்பயிற்சி நிலையம் மணப்பாறை வட்டம், வையம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. எனவே 2025-26ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை 19.06.2025 முதல் நேரடிச் சேர்க்கையாக நடைபெற்று வருகிறது. இத்தொழிற்பயிற்சி
நிலையத்தில் 10-வது மற்றும் 8-வது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கீழ்க்கண்ட தொழிற்பிரிவில் சேர்வதற்கு அசல் சான்றிதழ்கள் (மாற்றுச் சான்றிதழ், 10-வது மற்றும் 8-வது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார்அட்டை) உடன் நேரில் சென்று சேர்ந்து பயடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
01தொழிற்பிரிவு (Trade)Architectural draughtsman
10th -pass-Operator advanced machine tools,Technician electronics system design& repairWelderகல்வித்தகுதி- 8 pass
மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய 80729 65487 மற்றும் 94436 44967 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






