துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு அருகே செல்ல தடை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், 26.06.2025 ஆம் தேதி முதல் 06.07.2025 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30
மணி வரையும், மாலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் 27 BN ITBP, Alappuzha பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில்
மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






