கூடுதல் எண்ணிக்கை கேட்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது கூட்டணியில் பாதகமும் வந்து விட கூடாது -துரை வைகோ

கூடுதல் எண்ணிக்கை கேட்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது கூட்டணியில் பாதகமும் வந்து விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுப்போம் -திருச்சியில் துரை வைகோ பேட்டி
மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,மதிமுகவின் 31 வது பொதுக்குழு கூட்டம் நாளை ஈரோட்டில் நடைபெறுகிறது. 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
ஈரோட்டில் ஏற்கனவே இரண்டு மாநாடுகள், இரண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.இந்தாண்டு மதிமுக மாநாடு நடத்த உள்ளோம், மண்டல ரீதியான செயல் வீரர்கள் கூட்டம் நடத்த உள்ளோம் இது குறித்து நாளை வைகோ அறிவிப்பார்.
பொதுக்குழு கூட்டத்தை சென்னையில் வைக்காமல் கொங்கு மண்டலம் அல்லது தென் மண்டலத்தில் வைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர் அதன் காரணமாக ஈரோட்டில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறதுபட்டம் பதவிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் மதிமுகவினர். நான் ஒன்றிய அமைச்சராகும் சூழல் தற்போது இல்லை. எதிர்காலம் குறித்து தற்போது கூற முடியாது.
திமுக தலைமையிலான கூட்டணியில் எட்டாவது ஆண்டில் இருக்கிறோம். மத வாதத்தை எதிர்க்கும் அணியில் இருக்கிறோம். கூட்டணியில் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் ஒரு பொது நோக்கோடு நாங்கள் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம்.தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அந்த அங்கீகாரம் பெற வேண்டும், கூடுதல் எண்ணிக்கை கேட்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியின் பொது நோக்கத்திற்கு எந்த பாதகமும் வந்து விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுப்போம்.
எங்களின் ஆசைகளை கருத்துக்களை பொதுக்குழுவில் கூறுவோம். எத்தனை தொகுதிகள் கேட்க போகிறோம் என்பது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்.தேர்தலில் கேட்கும் தொகுதி கிடைக்கவில்லையென்றால் கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம் அதே நேரத்தில் குறைந்தபட்ச சுயமரியாதை நாங்கள் எதிர்ப்பார்ப்போம்.திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என்கிற எதிர்ப்பார்ப்பில் தான் எதிர்க்கடைகள் இருப்பார்கள். நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறும் எந்த சூழலும் இல்லை.எங்களுடன் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தும் சிந்தனை கூட கிடையாது.முருகனை நான் கோவிலுக்கு சென்று பார்ப்பேன் அங்கு வழிபடுவேன்.அரசியலில் மதத்தை கலப்பதை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். ஜாதி, மதத்தை கடந்து தான் அரசியலில் சிந்திக்க வேண்டும்.ஆளுநர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ் வின் பிரச்சாகராக தான் செயல்படுகிறார். இந்தியா முழுவதும் பா.ஜ.க விலிருந்து வாரிசுகள் அரசியலில் வந்து கொண்டிருக்கிறார்கள்.வேறு ஒரு இயக்கத்தின் பிரச்சனைனை குறித்து கருத்து சொல்வது அநாகரிகம். இன்னொரு அரசியல் கட்சியில் வேறு ஒரு அரசியல் கட்சி தலையிடக்கூடாது.மது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.
மதிமுகவிற்கு எந்த தொகுதி யார் வேட்பாளர் என்பதை கட்சி தலைமையும் கூட்டணியும் தலைமையும் தான் முடிவெடுக்கும்ஆட்சியில் பங்கு என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அது பல குழப்பங்களை தான் உண்டாக்கும்.மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பாஜகவினர் ஆங்கிலம் ஏன் கற்று கொள்ள கூடாது என்கிறார்கள்.தமிழ்நாட்டில் உள்ளவர்கள் உலகம் முழுவதும் பணிக்கு செல்வதற்கு இரு மொழி கொள்கையும் ஆங்கிலம் கற்றது தான் காரணம்.
ஆங்கிலம் இல்லாத இந்தியா என அமித்ஷா கூறுவது பிற்போக்கு தனமானது. வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எங்களுக்கு விருப்பம் உள்ளது அது குறித்து அவர் தான் முடிவெடுப்பார் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






