Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோலாகலம்!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (06.10.2025) பௌர்ணமி திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் இந்த சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் இன்று மாலை முதலே கோயிலில் திரண்டனர்.

மாலை சரியாக 6:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, திரளான பக்தர்கள் முன்னிலையில் திருவிளக்கு பூஜை கோலாகலமாகத் தொடங்கியது.
பக்தர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த விளக்குகளை ஏற்றி வைத்து அன்னை மாரியம்மனை வழிபட்டனர். இந்த பூஜையின் போது, சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்ப நன்மைக்காகவும், உலக நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தனர். விழாவின் முடிவில், பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


இந்த பௌர்ணமி திருவிளக்கு பூஜையில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *