Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி DRM-ஐ சந்தித்த துரை வைகோ: ரயில் நிறுத்தம், மேம்பாலம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு

இன்று (22.02.2026) காலை 10 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, எனது திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன்.

முதலில் இன்று காலை நான் கள ஆய்வு மேற்கொண்ட ஜீவா நகரில் ரயில்வே இருப்புப் பாதை அருகே வளர்ந்துள்ள முட்புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து,‌ திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி- மயிலாடுதுறை ரயில் எண் 16833/34க்கு நிறுத்தம் வழங்குதல்,

ஸ்ரீரங்கம் LC எண் 244/A பகுதியில் முன்மொழியப்பட்ட மினி ROB திட்டத்தின் தற்போதைய நிலை,

சமயபுரம் பூச்சொரிதல் திருவிழாவின்போது DEMU சிறப்பு ரயில் இயக்கம்,

திருச்சி–கரூர்–சேலம் இடையே ஷட்டில் (Shuttle ) ரயில் சேவை இயக்கம்,

குறிப்பிட்ட இடங்களில் முன்மொழியப்பட்டுள்ள ரயில்வே மேம்பால திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை,

வடக்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில் சப்வே அமைத்தல்,

G Corner தொடர்பான பிரச்சினை மற்றும் அதுகுறித்து சமீபத்தில் ரயில்வே அமைச்சர் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.

எனது கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக் கொண்ட திருச்சி DRM அவர்கள், அவற்றை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *