Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் தொடரும் அதிகாலை கொள்ளைகள் – பொதுமக்கள் அச்சம் – கவனிக்குமா காவல்துறை?

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களின் மண்டையை உடைத்து 17 பவுன் தாலி சங்கிலியை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

Advertisement

அதே போல் இன்று அதிகாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் கும்பலால் திருச்சி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

குமரன் நகர் 19வது கிராஸ் ஒளவையார் தெருவில் இன்று காலை வீட்டை உடைத்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

திருச்சியில் தொடர்ந்து அதிகாலையில் நடக்கும் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக காவல்துறையினர் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முகமூடி அணிந்து வரும் கொள்ளையர்களால் பொது மக்கள் பீதியில் உள்ளதால் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *