இந்திரா கணேசன் கல்வியகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் UBA இணைந்து “மீண்டும் மஞ்சப்பை” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியை ஒட்டி முன்னதாக 15,000 துணி பைகள் (5 கிலோ கொள்ளளவு) தயாரிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு இந்திரா கணேசன் நிறுவனத்தின் செயலாளர் Er. G. ராஜசேகரன் தலைமை தாங்கினார். மேலும் இயக்குநர் டாக்டர் G. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றி பாராட்டுரை வழங்கினார். வரவேற்புரையை பதிவாளர் டாக்டர் M. அனுசுயா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் கௌரவ சிறப்பு விருந்தினராக இந்திரா கணேசன் நிறுவனத்தின் ஆலோசகர், மற்றும் தலைவர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஸ்ரீரங்கம் கிளை,

திருச்சிராப்பள்ளி Rotarian AKS Dr. K. ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றியும் ஒற்றை முறை பயன்பாடு நெகிழி பைகள் மற்றும் நெகிழி கோப்பைகளின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்புரை வழங்கினார்.
Rotarian AKS Dr. K. ஸ்ரீநிவாசன் அவர்களின் முன்னிலையில்
இரண்டாம் கட்டமாக, 2000 துணிப்பைகள் இந்திரா கணேசன் கல்வி குடும்பத்தின் மருந்தியல்

கல்லூரி, செவிலியர் கல்லூரி, மற்றும் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு 17.12.2025 அன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுக்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வை பரப்பும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments