Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம்

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு, மண்டல அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் திருச்சியில் நடந்தது.

திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த முகாமை, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், இந்திய அலுவலர்கள் சங்க தலைவருமான சம்பத் துவக்கி வைத்தார்.

முதன்மை மாவட்ட நீதிபதி பாபு அவரது துணைவியாருடன் கலந்து கொண்டார்.இதில்,ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும் துணைத் தலைவருமான ரத்தினசபாபதி ,துணைத்தலைவர் வீரபாண்டியன், பொருளாளர் ஆர் துரை விடுதி காப்பாளர் பிரபாகரன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பங்கேற்றவர்கள் முழுமையான மருத்துவ பரிசோதனை,ரத்தப்பரிசோதனை கல்லீரல், தைராய்டு, மற்றும் கண் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் போன்ற இடங்களில் இது போன்ற முகாம்கள் நடத்தி, இந்திய அலுவலர் சங்கத்தினருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், இன்று திருச்சி மண்டலத்தில், இந்திய அலுவலர்கள் சங்கத்திற்கான மருத்துவ முகாம் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்துள்ளது.மண்டல பொறுப்பாளர்கள் முத்துசாமி உட்பட பலர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *