300க்கும் மேற்பட்ட ஸ்விகி உணவு விநியோகம் செய்பவர்கள் திருச்சியில் வேலைநிறுத்தப் போராட்டம்!!

300க்கும் மேற்பட்ட ஸ்விகி உணவு விநியோகம் செய்பவர்கள் திருச்சியில் வேலைநிறுத்தப் போராட்டம்!!

மாத ஊதியத்தை குறைத்த ஸ்விகி (swiggy) நிர்வாகத்தை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், கொரோனா பரவி வரும் இந்த சூழலிலும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் தங்களது ஊதியத்தை ஸ்விகி நிறுவனம் குறைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட ஊதிய குறைப்பை கண்டித்தும் உடனடியாக எங்களுக்கு வழங்கப்பட்ட பழைய தொகையை திருப்பித் தரவேண்டும் என்றும் கூடுதலாக கூட தர வேண்டாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தங்களது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனிமனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய தொகையை திருப்பித் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…Follow this link to join my WhatsApp grouphttps://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5